பசுமையான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு
பசுமையான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு “தடைகள் வெற்றியின் புதையல், தடங்கல் வெற்றியின் தடங்கள்” இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும், தடங்கலையும் சாதனைகளாக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவர்க்கள் இளைஞர்கள் . பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்னிற்பது அந்நாட்டின் இளைஞர்கள் ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்து விட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் உலகின...